Skip to main content

Posts

Featured

ஏதிலிகளின் சொற்கள்

ஏதிலிகளின் சொற்கள்  அம்பலம் ஏறுவதில்லை உயிர் விதிர்க்க பயிர் விளைவித்தாலும் நொய்யிற் பிளவளவேனும் பயனில்லை முற்றத்தில் நெற்கொத்தும் சாம்பற்குருவிகளும் கூட சாளரம் திறப்பின் சிதறி ஓடும் மின்னற் சூல் கொண்ட  மஞ்சுப் பொதிகளில் எப்பொழுதெனினும் பேரிரைச்சல்தான் சிறிதேனும்  இந்த உலகத்துக்கு அப்பால் உயரப் பறக்க வேணும் அலையாழி அரிதுயிலும் அகண்ட வெளிக்கப்பால் எனக்கான மைல்கல்  ஏதேனும் ஓர் உருவில் இருக்கக் கூடும்

Latest Posts

கனவுகளைப் பரிசளிப்பவன்

உயிர்க்குமிழிக்கு வெளியே...

போதும்

How to name it?

கலைஞர்கள் கலைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!

செங்கால் நாரைகள்

பெரியாழ்வாருக்கு...

சாம்பவி

பின் தொடர்பவர்கள்