பெயரில்லாக் கவிதை

பகல் விழுங்கிய
இரவின் கண்
நம்மை
மறந்து விட்டிருக்கிறது

உலகம் முழுதும்
உறங்கும்போது
நாம் இருவர் மட்டும்
காரணமில்லாதத்
தேடல் ஒன்றில்
மூழ்கிக் கிடக்கிறோம்

சிந்திக் கிடக்கிற
மதுவிலும்
கவிழ்ந்துக் கிடக்கிற
கோப்பைகளிலும்
வழிந்து கொண்டிருக்கிறது
நம் காதலும்
உன் கண்ணீரும்...

Comments

பத்மா said…
உலகம் முழுதும்
உறங்கும்போது
நாம் இருவர் மட்டும்
காரணமில்லாதத்
தேடல் ஒன்றில்
மூழ்கிக் கிடக்கிறோம்

இப்படி எத்தனை பேர் ....
கண்ணீரும் கவிதையும் ஓட்டிப் பிறந்தவையோ?
இனிய இசை சோகமுடைத்து... கவிதையும்தான்.. பரவச நிலையில் கவிதை எழுதினாலும் கண்ணீர் உகுக்கிற தருணம் ஒன்று கண்டிப்பாய் அங்கே வந்தே தீரும்... :)

நன்றி பத்மா... :)

Popular Posts

பின் தொடர்பவர்கள்