எனக்கும் எனக்குமான உயிர்மொழி

அடர் வானின் விளிம்பினின்று
நிரம்பி கசிகின்றன
உயிரின் வர்ணங்கள்
எழுத்துருவில்லாத் தனிமொழியொன்றில்
சிறையெடுக்கப்பட்டிருந்தது
மழையின் மொழி
அமிழ்ந்து மேலெழும்
உயிரின் ஒலியில்
பீடிக்கப்பட்டு
படமெடுத்தாடுகின்றன
இரவின் சர்பங்கள்
மனது இலயிக்கும் பொருள்தேடி
அலைகையில்
மறைந்தே போகிறது
யாக்கையின் விதிர்ப்பு
எழுத்தும் ஓசையும் வற்றிப் போனதான
சந்தியில்
நீள்கின்றன காத்திருப்பின் தருணங்கள்
மழைப்பீலியின் ஸ்பரிசம் கண்ட இரவொன்றில்
எனக்கும் எனக்குமான உயிர்மொழி

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்