செங்குருதி படிந்த

போர் மேகங்களின்
ஒவ்வோர் மழைத்துளியாய்
புத்தன்கள்

விதைத்து
பின் முளைத்து
எழுகிற போதி மரங்களின்
விறகுகளில்
எரிக்கப்படுகிறது
மானுடம்


எஞ்சிய விறகுகளில்
இழைக்கப்படுகின்றன
துப்பாக்கிகளின் கைப்பிடிகள்

இன்று
அதிகாலை செய்தித்தாள்
அரை மணி தாமதம்
கடைக்காரன் நாசமாய்போக!

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்