பிறகு...

நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் எழுதுகிறேன். இதுவரைக்கும் எதுவும் எழுதாதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவுமில்லை. ஆயிரம் ஆயிரம் நீர்க்குமிழிகள் உடையும்போது இந்த ஒரு குமிழியை மட்டும் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?

பிழைப்புக்காக ஊர் ஊராய்த் திரிவது இந்த வாழ்க்கை என்பது இப்பொழுதுதான் கரும்புகையென மேலே கவிய ஆரம்பித்திருக்கிறது. இத்தனை நாளாய் ஒரே இடத்தில் வேரூன்றி இருந்துவிட்டு திடுமென பெயர்த்து எடுத்து இன்னொரு இடத்தில் நடப்படுவது எவ்வளவு வலி? பறக்காத விதை வாழாது என்பது இயற்கையின் நியதி. Survival of the fittest என்பதுதான் நிதர்சனம் போல.

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்