உனக்கான கடிதங்கள்

உனக்கான கடிதங்கள்
முகவரி இல்லாமலேயே
கரைகின்றன
காற்றின் கடினத்தைக் கொண்ட நாட்களில்
மேகக் கூட்டங்களின் நடுவே
நாம் ஒன்றாய்
பறந்து கொண்டிருந்தோம்.
பின்னொரு நாளின் இரவில்
பிறையின் மீது நடந்திருந்தோம்
ஒன்றாய் கை கோர்த்தபடி.
அந்த
வானத்துத் தாரகைகளின் மழைத்துளி
குளத்தில் தேங்கியிருந்த நேரத்தில்
உன் அதீதப் புன்னகையில்
துளிர்த்தது எனக்கான நிலவு
அதன் பின்
ஒவ்வொரு நாளிலும்
உனக்கான கடிதங்கள்
முகவரி இல்லாமலேயே
கரைகின்றன.

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்