முதல் கொலை

என்
முதல் கொலை
இன்னமும் தித்திக்கிறது
கழுத்தில்
கால் வைத்து அழுத்தியதில்
பிரியாத உயிர்
கத்தியால் கீரி இரணப்படுத்தியும்
சாகாத தேகம்
இறுதியில்
ஒற்றைக் கல்லால்
உன் இதயம் பதம் பார்த்தபோது
துடி துடித்துப் பிரிந்தது
ஒரு எலியைக் கொல்வது போல
சித்திரவதை செய்து
கொல்வதில் உள்ள
சுகம்
என் இறப்பிலன்றி
வேறெதிலும் இனி
கிடைக்கப் போவதில்லை

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்