உன்னால்...

சிவந்த மேகங்களின்
ஊடாய்
கண்ணீருடன்
நீ கடந்தபோது
மேகப் பஞ்சுடன்
நானும் பறந்துகொண்டிருந்தேன்
ஆதிப்பறவையொன்று
அழுதகண்களாய்
பறப்பதைப் பார்க்கையில்
மெழுகு அழுதிடும் ஜ்வாலையாய்
தெரிந்தது 
எனக்கும்  
எம்முடன் பறந்த
முகம் அறிந்திரா
இன்னொரு மேகத்துக்கும்
உனக்கான சமாதானத்தை
உன்னில் இருந்தே
எழுப்ப எண்ணி
ஒளி குன்றிப்போன
என் கதையை
உனக்கு கூறினேன்
நிம்மதியடைந்து
நீ
பறந்து போனாய்
அழுத கண்களுடன்
நான்
அவ்விடம் அகன்ற
சுவடறியாமல்...

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்