கனவுகளைப் பரிசளிப்பவன்

இந்திர நீலத்து
கல் ஒன்றை
கரைத்துக் குடிப்பதாய் கனவொன்று
நான்
விஷம் குடிப்பதற்கு முதல் நாளில்
குடித்த பிறகு
கரைந்து கொண்டிருக்கும் மணிகளிலெல்லாம்
வெள்ளை புறா பறப்பதாய்
கனவு
ஒவ்வொரு கணமாய்
ஒவ்வொரு செல்லாய்
அழுகிக் கொண்டிருக்கையில்
மகிழம்பூ சிதறிப்போன
மண்தரையில் புரண்டுகொண்டிருப்பதாய் ஓர் கனவு
எல்லாம் முடிந்து
மேலெழும்பிக்கொண்டிருக்கையில்
ககனக் கனவுகளை குத்தீட்டியில் சொருகி
புன்னகையுடன் எய்வதற்காய்
காத்துக்கொண்டிருந்தான்
கனவுகளைப் பரிசளிப்பவன்!

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்