மதுரைக்கு போன கதை

ஊருக்கு போவதற்கு என்று காரணம் ஒன்றும் இல்லை. ஊருக்கு போய் ரொம்ப நாளாகி விட்டதாலும், நம் இருப்பை உற்றாருக்கும் உறவினருக்கும் உறுதி செய்ய வேண்டிய கடமைக்காகவும் போக வேண்டியதாய் இருந்தது. அங்கு ஒரு வேலையும் இல்லை என்றாலும் வழக்கம் போல பலத்த பிரிவுபசாரங்களுக்கு பிறகு கிளம்பி வந்தேன்..

என்னவோ போன வியாழக்கிழமை, திடீரென்று ஊர் ஞாபகம் வந்தது. ஏன் என்றும் தெரியவில்லை. உடனே லீவ் apply செய்து விட்டு கிளம்பிவிட்டேன். ஏதோ இப்போதைக்கு வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பதால் இதெல்லாம் சாத்தியமாயிற்று.. இல்லாவிட்டால் இன்னேரம் ஏதோ projectஅயே நம்மதான் நட்டமா தூக்கி நிப்பாட்டப் போற மாதிரி சத்தம் போட்டு ஊர கூட்டி இருப்பாங்க... இத்தனைக்கும் நாம பாக்கறது என்னவோ excel sheet, இல்லாட்டி word document proof reading மாதிரியான வேலையாத்தான் இருக்கும். அதுக்கே இப்படி... என்ன கொடுமை சார் இது!

இந்த கலி காலத்தில் தான் off-season, season என்ற பாகுபாடே கிடையாதே.. அதனால் வியாழக்கிழமை அதுவுமா மதுரைக்கு ஏதாவது பஸ் கிடைக்குமா என்று பயந்து பயந்து கோயெம்பேடு என்ற ரத நிறுத்ததிற்க்கு (அதாங்க bus stand) சென்றேன். போவதற்கு ஆட்டோவில் 150 ரூபாய் வேறு. (பிற்பாடு இதையே வீட்டில் பெருமையாக பேசி அப்பாவிடம் வாங்கிக் கட்டி கொண்டது என்னவோ வேறு விஷயம். பின்ன.. மதுரைக்கே unreserved compartmentல் வெறும் 120 ரூபாய் தான்.. ) எப்படியும் இந்த பிறவியிலும் சரி முற்பிறவியிலும் சரி.. நான் புண்ணியத்தைத் தேடியதற்கு வாய்ப்பே இல்லாத காரணத்தினால் எனது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் யாரோ மண் தரையில் நடந்து சென்ற ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்த புண்ணியம் எனக்கு ஒரு ஏசி பஸ் ஒன்று கிடைத்தது. (கடைசி வரை பக்கத்து சீட்டில் யாரும் வராமல் அந்த இரண்டு சீட்டையும் நானே ஆக்ரமித்து வந்தது அந்த புண்ணியத்தின் பக்கவிளைவுகளில் ஒன்று)

வழக்கமாய் பேருந்தை 13-15 மணி நேரம் உருட்டி எங்கள் சாபங்களுக்கு ஆளாகும் ஓட்டுநர்களுக்கு மத்தியில் எங்கள் ஓட்டுநர் ஒரு exceptional case. இரவு 10 மணிக்கு எடுத்த வண்டியை சரியாக காலை 7.30 க்கு கொண்டு போய் சேர்த்தார். அவர் பிள்ளைக் குட்டிகளெல்லாம் நல்லா இருக்குஞ்சாமி.. (இரவு 9 மணிக்கு கிளம்பி மறு நாள் மதியம் 3 மணிக்கு போய் சேர்ந்த வரலாறு எல்லாம் நமக்கு உண்டு என்பதால் ஓட்டுநருக்கு இந்த வாழ்த்துக்கள் அவசியமாகிறது..)


இரண்டு மாத இடைவெளி விட்டு போனதினாலோ என்னவோ மதுரை எனக்கு ஒரு வித்தியாசமாய் பட்டது. வழக்கமாய் ஒத்தக்கடையிலிருந்தே கூடவே வரும் மைக் செட்களும் சரி, பந்தல், கட் அவுட்களும் சரி இந்த தடவை ஏதோ வழக்கத்தை விட எண்ணிக்கையில் குறைந்ததாய் ஒரு illusion. ஒரு வேளை அது உண்மையாய் இருந்தால் அரசியல்வாதிகளுக்கு மிக்க நன்றி. (ம்துரையை சுத்த படுத்த முயல்வதற்காக...) ஆனால் ரொம்பவும் மாறி போகவில்லை மதுரை. அதே மண் வாசனை. அதே மாடு முட்டும் கலரில் சட்டை அனிந்த இளைஞர்கள். பெண்கள் மட்டுமே கொஞ்சம் நாகரிகத்திற்கான மாற்றங்களில் அடியெடுத்து வைக்கிறார்கள். I was able to sense the transition of this big village to a metropolitan. நாகரிக மாற்றங்களை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது மதுரை. Anyways.. I pray Her Holiness Meenakshi to save Madurai from losing its cultural back bone amidst these changes. இந்த மாற்றங்களும் ஏதோ ஒரு நல்லதுக்குத்தான்.. அப்புறம் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டிருக்கும் என்னைப் போன்ற அற்ப மானிடப் பதர்கள் மெல்லுவதற்கு வேறு விஷயம் இல்லாமல் போய் விடுமே...


என்னதான் இங்கே சென்னையில் மாச கடைசியில் பிச்சை எடுத்தாலும் சொந்த ஊருக்குப் போகும்போது மட்டும் பந்தாவிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. இறங்கியவுடனேயே ஆட்டோவை பேரம் பேசி வீட்டிற்க்கு சென்றேன். இதில் ஆட்டோ காரன் காமெடி தான் தனி. நம் கையில் ஒரு பெட்டியையும் laptopஐயும் பார்த்த வுடனேயே அவன் ரேட்டை தீர்மானித்துவிடுகிறான். (ஆட்டோ ரேட்டுகள் பெட்டிகளால் தீர்மானிக்கப்படுகின்றன... எப்பூடி.. நாங்களும் கவிதை எழுதுவோம்ல..) சாதாரணமாய் 30 ரூபாயில் போக வேண்டிய முருகன் தேட்டருக்கு அவன் கிட்டத்தட்ட சொத்தையே எழுதி கேக்க... வடிவேலு ரேஞ்சுக்கு ஒரு ரீயாக்சனைப் போட்டு விட்டு நகர்ந்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் இன்னொரு ஆட்டோகாரர் (கவனிக்கவும்.. 'ர்') வர அவர் என் சம்பளத்தை மட்டுமே எழுதி கேட்ட காரணத்தினால் இக்கரைக்கு அக்கரை பச்சை என அதில் ஏறி வீட்டுக்கு போனேன்.

--தொடரும்...



(இது வரைக்கும் படித்ததையே தாங்க முடியாதவர்களுக்கு, அடுத்த தொடரின் திருப்திக்கு நான் கியாரண்டி தரப் போவதில்லை.. எதற்கும் முடிந்தால் படித்து பாருங்கள்)

Comments

Swarna said…
Good one mani.. Nice try.. keep writing..!
Brindha said…
Very well written!!! ;)

பின் தொடர்பவர்கள்