எழுத்தூடல்

எழுதுவதாய் எத்தனித்து
எடுத்தேன் என்
முதல் எழுத்தை.
விடிவதற்குள் முடிக்கிற அவசரம்.
முதல் எழுத்து
என்னிடம்
எழுதப்படுகிற
விஷயம் கேட்டது.
எழுத்துக்கு
அது தேவையில்லையென
எழுத ஆரம்பித்தேன்.
நானும் தேவையில்லையென
எழுத்தும் போனது.
இன்னமும் அலைகிறேன்.
எழுத முடியா மோனத்திற்கான
எழுத்துக்களைத் தேடி...

Comments

:-) நல்லாருக்கு!

பின் தொடர்பவர்கள்