சுயமறுதலிப்பு

என் வாசலுக்கு வெளியே
ஆயிரம் சூரியன்கள்
ஒவ்வொன்றும்
திசைகளற்ற  வெளியில்
பயணிக்கின்றன
வாசலில் தொடங்கிய
மஞ்சள் கீற்றுகளால்
வருவோரின் வானத்தை
நிரப்பிக்கொண்டு!

வாசலுக்குள்ளே
வார்த்தைகளற்ற இருளில்
தனியே மிதக்கிறேன்
ஓளி விரிகின்ற
வெளியின்
பிரக்ஞையின்றி!

Comments

Paleo God said…
ஆட்டம் ஆரம்பம்..:))

வாழ்த்துகள். :)
Unknown said…
// வாசலுக்குள்ளே
வார்த்தைகளற்ற இருளில்
தனியே மிதக்கிறேன்
ஓளி விரிகின்ற
வெளியின்
பிரக்ஞையின்றி! //

நல்லா இருக்கு
நன்றி பேநா மூடி..

நன்றி ஷங்கர்..

:)
மிகச்சிறந்த கவிதை! வாழ்த்துகள்.

Popular Posts

பின் தொடர்பவர்கள்