கால அலை

காலங்காலமாய்
ககனம் ககனமாய்
இந்த கடைசி மனிதனின்
தொலைந்துபோன
காலச்சுவடுகளைத் தேடி
தொடர்கிறது
ஓர் முடிவிலாத் தேடல்
ஒவ்வொரு சுவடும்
கால அலையினால்
அழித்துச் செல்லப்பட்டிருக்கின்றன
அடித்த அலைகளில்
ஆண் அலை எது?
பெண் அலை எது?

Comments

பத்மா said…
கடைசி மனிதனின் காலடி சுவட்டை தேடுவது யார்? யாராவது தேடினால் அவர்கள் தானே கடைசியாக இருக்க இயலும் ?
என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் தான் இந்த உலகத்தின் கடைசி மனிதன் என்ற எண்ணம் இருப்பதாய்ப்படுகிறது. இந்த எண்ணம்தான் ஒவ்வொரு மனிதனையும் கடைசி நிமிடம் வரையிலும் அவன் வாழ்வை உயிர்ப்பை இருத்தி வைக்கிறது. இந்த கவிதையும் இதை அடிப்படையாய் வைத்து எழுதியதுதான்.

நன்றி பத்மா! :-)

பின் தொடர்பவர்கள்