மழைப்பாடல்

யாமப் பெருங்கனவுள்
சிதறி வீழும்
மின்னலாய்
மழைத் துளிகள்
மெல்லியதாய்
உயிர்த்துளியாய்
கனவுத் திட்டாய்
மேல்விழுகிற
தருணம்
யான் நினைத்திருக்கவில்லை
இது
எனதான மழைத்துளியென்று
இந்த
வானப் பெருங்கடல்
அலையடித்து
மண் இறங்குகையில்
எழுப்பிச்செல்கிறது
மண்வாசனையையும்
வற்றா
உயிர்ச் சிலிர்ப்பும்...

Comments

//இந்த
வானப் பெருங்கடல்
அலையடித்து
மண் இறங்குகையில்
எழுப்பிச்செல்கிறது
மண்வாசனையையும்
வற்றா
உயிர்ச் சிலிர்ப்பும்... //

அருமை. வாழ்த்துக்கள்.

பின் தொடர்பவர்கள்