இலங்கைத்தமிழில் ஒரு கதை...

இதுவரை இலங்கைத் தமிழில் நான் எந்த சிறுகதையும் படித்ததில்லை. படிக்கவும் வாய்ப்பு கிடைத்ததில்லை. மதுரை, கொங்கு, நெல்லை என பரவலாக அறியப்பட்டத் தமிழுள், இலங்கைத் தமிழில் மட்டும் இது வரை எந்தவொரு கதையும் புதினமும் தமிழக வெகுஜனப் பத்திரிக்கைகளில் அடிக்கடி வந்ததாகத் தெரியவில்லை. ஒரு வழியாக இந்த வாரம் விகடனில் வந்த சிறுகதை 'புதுப் பெண்சாதி' படித்தேன். இலங்கையின் மணம் அந்த ஐந்து பக்கம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

கதையின் களம் போராளிகளும், போர்க்குணமும் திணிக்கப்பட்ட மண் என்றாலும் (நான் பிறந்த காலத்தில் இருந்து இலங்கை என்னிடம் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது). கதையின் களம் ஒரு சாதாரண ஈழக் குக்கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. கதையின் நாயகியே முன்னிறுத்தப்பட்டிருக்கிறாள். ரொம்பவும் சீக்கிரமே முடிந்த மாதிரி ஒரு பிரமை. என்னைக் கேட்டால் அப்படித்தான் இருக்க வேண்டும். ரொம்பவும் வர்ணனைகளுடன் வருகிற கதைகள் சீக்கிரமே அலுத்து விடும். கடைசி வரை அலுக்காமல் ஆனால் கதையின் சாரமும் கரையாமல் இருக்கிற கதைகள்தான் இப்போது போணியாகின்றன. ஓடவும் செய்யும்.... ஆனால் ஐந்து பக்கங்களுக்குள்ளாக இலங்கையின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

முதல் இரண்டு பக்கங்களில் எங்கேயும் நடக்கிற சாதாரண நிகழ்ச்சிகளுடன் கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. கடைசி ஒரு பக்கத்தில் தான் குறைந்த பத்திகளூடே போரும், அதனால் திசைத்திருப்பப்படுகிற அவ்விடத்து மக்களின் வாழ்க்கையும் ஒரு வகையான மறைபொருளாய் உணரக்கூடிய ஒரு சோகத்துடனே விவரிக்கப்படுகின்றன. மொத்ததில் கதை ஒரு இனம் புரியாத ஆற்றாமையையும் ஒரு வித சோகத்தையும் நம்மை உணரவைக்கிறது. மீட்டெடுக்கிற வலிமை இருந்தும் முடியாமல் போன ஆற்றாமை என பிசைகிறது இந்த கதை.

தமிழர்களின் தேசம், கைவிட்டுப் போனபின் இனி இது போன்ற கதைகளிலும், கட்டுரைகளிலும் தான் அதைப்பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று நினைக்கும்போது பெருமூச்செறிவதையன்றி வேறு வழியில்லை. இனி இது போன்ற முற்காலத்து அழகியலையும், இக்காலத்து ரணங்களையும் வலிகளையும் தாங்கி வருகிற இவைதான் நமக்கு இனி சுவடுகள். கண்ணீரே வாழ்க்கையாகிப் போன இந்த மக்களுக்கு இனிமேலாவது ஏதேனும் ஒரு ஆறுதல் கிடைக்குமா என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். வெளிச்சம் கிடைக்கட்டும்.....

Comments

பதிவை ரசித்தேன்
நல்லதொரு பதிவு.. ஆனால் சின்னக் குறை...ஈழத் தமிழனை கடவுள் கை விட்ட கதை ஒரு தொடர்கதை. தன்னிருப்புக்கான வெளிச்சமே இல்லாது ஈழத்தில் இருக்கும் கடவுளுக்கு எங்கள் கதை எப்படித் தெரியும்.

முடிந்தால் இதைப் படியங்கள்.

http://thurkamano.blogspot.com/2009/09/blog-post_3101.html
Anonymous said…
Wow, incredible blog structure! How long have you ever been running a
blog for? you made running a blog look easy. The total look of your web site
is fantastic, as neatly as the content material!



Here is my web blog anxiety panic attacks (en.wikipedia.org)

பின் தொடர்பவர்கள்