இளவேனிற்காலத்து கவிதைகள் - 3

நாம் பற்றியாடிய
ஒற்றை விழுது
ஆலமரம்,
இன்று
வெட்டி வீழ்கிறது.

அதன் வேர்களில்
புதைந்திருந்த
நம் வயதறியா நினைவுகள்,
மரத்தின் கிளைகளோடு
விறகாக்கப் படுகின்றன

உயிர் பறிக்கும் பொழுதில்
வீசி எறியப்பட்ட
நம் நட்பின் சுவடொன்று
நீரில் மூழ்கிக் கொண்டே
உமிழ்கிறது
நம் நினைவுகளின்
மிச்சங்களை.

Comments

பின் தொடர்பவர்கள்