ராஜாதி ராஜ சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்தி ஸ்ரீ

திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள்

தொல்குலம் விளங்கத் தோன்றி மல்கிய

வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும்

குடதிசை மகோதையும் குணதிசைக் கடாரமும்

தண்டினில் கொண்ட தாதைதன் மண்டல

வெண்குடை நிழலெனத் தாங்குடை நிழற்றித்

திசைதோறும் செங்கோல் ஓச்சி இசைகெழு

தென்னவன் மான பரணன் பொன்முடிப்

பருமணிப் பசுந்தலை போருகல்த தறிந்து

வேணாத் தரசரைச் சோணாட் டோதிக்கிக்

கூவகைத் தரசரைச் சேவக தொலைத்து

வேலைக்கோல் காந்தளுர்ச் சாலைகள mஅருத்தர்பின்

தங்குலத் தவநிபர் நன்குதறு தகிமயில்

அரசியலுரிமை முறைமை லேத்தி

வில்லவர் மீனவர் வேல்குலச்ச லுக்கியர்

வல்லவர் முதலாய் வணங்கி வீற்றிருந்து

தராதலம் படைத்த திக்கேழும் துதிகேழு

செயங்ககொண்ட சோழ நேனுன்னும் மதிகேழு

கோவிராச கேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ

தேவர்க்கு யாண்டு.....

Comments

பின் தொடர்பவர்கள்