மனிதனாகிய மிருகமும், மிருகமாகிய மனிதனும்

மீட்பின்
வகையறியா
நிதர்சனப் புள்ளிகளில்
நித்தமும் தொலைகிறான்
மனிதன்.

நிகழ்கால விளிம்புகளில்
நிச்சயிக்கப்பட்ட நிகழ்வுகளின்
தப்பித்தலின் உணர்வில்லா
மிருகம்.

கூற்றத்தின் கயிறு
கிளைத்துப் பரவுகிற
வெளிகளில்
ஒன்றாய் இணைகின்றன
மனிதனாகிய மிருகமும்
மிருமாகிய மனிதனும்.

Comments

பின் தொடர்பவர்கள்