கனவுகளை சுமந்தபடி!

முதல் சொல்
முதல் முத்தம்
முதல் அணைப்பு
மறக்க முடியாததாகவே இருக்கிறது
இன்று வரையில்.
வேட்கை தணிந்த இரவொன்றில்
ஆசை களைந்து எழுகையில்
நீ முன்னிலும்
அழகாகியிருந்தாய்
ஒரு மலர்ந்த தாமரையைப்போல.
பின்னொரு மழையிரவில்
கதைகள் பேசிக் கிடக்கையில்
ஒளிக்கும் இருளுக்கும்
இடையே
ஓர் ஆளரவமற்ற
மாயப்பிரபஞ்சம் காட்டினாய்.
காதல் என்றதொரு சொல்கூட
தோலில்லா தேகக்கூடாய்
விளங்கிற்று
நம் வார்த்தைகளற்ற வெளியில்.
உனக்கும் எனக்குமான
இடைவெளி
குறைந்து வந்ததை
புதைவாழ்வில் அமிழ்ந்திருந்த
நீயோ நானோ
அன்று
அறிந்திருக்கவில்லை
நிலவுதிரும் ஒரு நாளில்
பெயர் தெரியா பறவையொன்று
தொடுவானில் கரைவதைப் போல
நீ கரைந்து போனாய்
உன் தடம் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.
என்னுள் இருந்து
நீ கண்சிமிட்டிக் கொண்டிருந்தாய்.
இன்னமும் அழகாய்த்தான் இருக்கிறது
நீயற்ற வாழ்வெளியில்
நிழலற்ற மனிதனாய்
நின் கனவுகளை சுமந்தபடிக்கு வாழ்வது!

Comments

பத்மா said…
தோலில்லா தேகக்கூடாய்

arumai


konjam valiyuda vaasikka vendiyullathu ..eninum kavithai arumai
Brindha said…
Nicely written! Especially the last four lines :)
Who is the girl behind? :P
nandri padma!! :-)
Thanks Brindha!! :-)) and your's is a good question, but I dont have a correct answer!! :-D :-D

பின் தொடர்பவர்கள்