பெற்ற பட்சிகளுக்காய்!

சில பல சமயங்களின் வெப்பம்
என் மீதத்தின் மீதாய்
கவிகிறது
தருண வாழ்க்கையின் சகடைகள்
எப்படி உருட்டப்பட்டாலும்
தாயத்தையே காண்பித்திருந்தன
இந்த கருவெளிக்கு அப்பாலான
பிரதேசத்தில்
நினைவுகளின் மடிப்பில்
அமிழ்ந்து
அழிந்து போன
கீற்றுகள் மீள் பிரவாகம் கொண்டு
பொங்குகையில்
நானாகிய நீயும்
நீயாகிய நானும்
இரு பிம்பங்களாய் பிரிந்து விட்டிருந்தோம்
எத்தனையோ பிறவிகளாய்
அமிழ்ந்து விட்ட மயக்கத்தில்
நீயின்னும் இருக்கையில்
சில பல சமயங்களின் வெப்பம்
என் மீதத்தின் மீதாய்
கவிகிறது
நாம் பிரிந்த தருணத்திலிருந்து
எல்லாமே என்னை
எதற்குள்ளோ
அமிழ்த்துப் போகின்றன
ஒவ்வொரு தருணமும் நான்
எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே
என் துயரம் சொல்கின்ற
எச்சக்கவிகளை
இன்றேனும்
என் உடைந்து போன முனை
எழுதித் தொலைக்க வேண்டும்!

Comments

electraspider said…
//என் துயரம் சொல்கின்ற
எச்சக்கவிகளை
இன்றேனும்
என் உடைந்து போன முனை
எழுதித் தொலைக்க வேண்டும்//

பின் தொடர்பவர்கள்