பெயரிலாப் பெருமர விருட்சத்தின் கண்ணீர்

நெடுமரத்தின் வாதைகள்
கிளிகளுக்குத் தெரிவதில்லை
ஆழ்ந்து வளர்ந்து
பின் அழிந்து போன
விருட்சத்தின் வேர்களில்
அமர்ந்து
அவை கொத்துகையில்
சிதறி ஓடும்
விருட்சத்தின் கண்ணீரும் செந்நீரும்
நெடுநிலம் பரந்து
நிழல் தந்த விருட்சம் விதிர்த்துச் சொல்லும்
தன் பட்டுப் போன கதையை
இது வரை எந்த கிளிகளும்
அதை உணர்ந்து கொள்ள
எந்தனித்ததில்லை
இருப்பினும்
காற்றின் அளாவலில்
கலைந்து எழுந்து
எதிர்நோக்கும் விருட்சம்
தன் கதை உணரும்
காதல் கிளியை

Comments

பின் தொடர்பவர்கள்