உயிர்க்குமிழிக்கு வெளியே...

ஒரு குளிர் இரவின்
மௌன மென் புஷ்பமாய்
சினேகித்துத் தழுவுகிறது
மரணம்

ஆயிரம் அண்டத்து
சப்தப் பிரவாகத்தில் ஆழ்த்தி
மோனக் கரைசலில்
அமிழ்த்துக் கரைக்கிறது
அது

காலத்தின் மண்பிண்டங்கள் நாம்

ஒவ்வொரு கணமும்
ஏதோ ஓர் மாந்திரீகனால்
கும்ப நீர் தெளித்து
உயிர்த்தெழுப்பபடுகிறோம்

சடப்பிரக்ஞை
அற்றுப்போனதான நொடியொன்றில்
சேர்ந்தே அறுந்து விழுந்திற்று
தேவப்பிரசன்னமும்

மூன்றாகும் உலகம்
என்று
விசித்து அழுகின்றது
காற்று
மூன்றாம் உலகின்
மகத்துவம் உணர்த்தாமல்

நானும் நீயும்
உயிர்ப்பந்து எறிந்து விளையாடும்
கடவுளின்
சுயகற்பிதங்கள்

Comments

Hotlinksin.com said…
நண்பரே, உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்.
Unknown said…
/நானும் நீயும்
உயிர்ப்பந்து எறிந்து விளையாடும்
கடவுளின்
சுயகற்பிதங்கள்/

அருமையான வரிகள்!!

பின் தொடர்பவர்கள்