மொழியில்லாக் கவிதைகள்

என் கவிதைகளுக்கு
மொழியில்லை
பார்வையற்ற கண்களும்
வெளிறிய முகமுமாக
இருண்ட தடத்தில்
அவை
கால் பதிக்கின்றன.
வெளிச்ச கீற்றுகள்
எப்பக்கத்திலிருந்தும்
தாக்கினாலும்
தாக்காவிட்டாலும்
பாதகமில்லை.
வர்ணம் கலையாத
ஒளிக்கற்றைகளின்
தடங்கள் மட்டும் போதும்
என்
மொழியில்லாக்
கவிதைகள்
முன்னேறிச் செல்ல

Comments

ரொம்ப பிடிச்சிருக்குங்க.
ரொம்ப நன்றிங்க... ராஜாராம்... :)
அருமை நண்பா.

பின் தொடர்பவர்கள்