தொடர்கவிதை

இது எத்தனையாவது முறை என்பது தெரியவில்லை. ஆனால் எழுதத்தொடங்கி முடிக்காமல் விடுவது எனக்கு இது முதன்முறையில்லை.

எழுதவதற்கு என்று ஒரு கரு அவ்வளவு சாதாரணமாய் கிடைத்துவிடுவதில்லை. அதற்கு நிரம்பவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஏதேதோ எண்ணங்கள், ஏதேதோ உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் கட்டுக்கடங்காமல் அலைய விட வேண்டியிருக்கிறது. அப்படி அலைகிறபோது கிடைக்கிற ஏதோ ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிற ஒரு வியாசமோ இல்லை கவிதைகளோ அதே மன நிலையில் எழுதும் போது மிகச் சரியாக முற்றுப் பெறுகிறது. சில சமயங்களில் பாதி எழுதும் போதே ஏதோ ஒரு திடீரென்று முளைக்கிற ஒரு சோம்பேறித் தனத்தால் பாதியிலேயே நின்று விடுகிறது.

இன்று இப்படி ஒரு கவிதையை ஆரம்பித்து பாதியிலேயே விட வேண்டியிருந்தது...

"இது
சொற்களின் அடர்வனம்.... "

அப்படியே ஆரம்பித்து கொஞ்சம் முடித்து வையுங்களேன்... கவிதைக்கு எந்த வரைமுறையும் கிடையாது... எவ்வளவு வரிகள், எதைப்பற்றி என்ற நிபந்தனைகளும் இல்லை...
காட்டுங்கள் உங்கள் திறமையை....

Comments

பின் தொடர்பவர்கள்