ஓ மனிதா!!!

ஒவ்வொரு முறையும்
இறப்பிற்காகவோ
இழப்பிற்காகவோ
தவற விட்டத்
தருணங்களுக்காகவோ
விடுபட்டுப் போன
நினைவின்
பிணைப்புகளுக்காகவோ
அழுகிறபோதும்
சலித்துக் கொண்டே
சொல்கிறான் இறைவன்
"ஓ மனிதா!!!"

Comments

புதுமையான சிந்தனை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
நன்றி பனித்துளி சங்கர்!!! :)
Paleo God said…
நண்பா கவிதை மட்டுமே எழுதனும்னு வேண்டுதலா? சிந்தனைய தூண்டறமாதிரி படிச்சதிலேர்ந்து ஒன்னு உருவிவிடு தல!

- சாதா ஷங்கர்! :)
டக்குனு எழுதறதுக்கு கவிதை மட்டும்தாங்க தோதா இருக்கு... அப்படி சிந்தனையா தூண்டறா மாதிரி ஏதாவது எழுதலாம்னா நாம மொதல்ல நெறைய சிந்திக்க வேண்டியிருக்கு...

ஆனாலும் தல சொல்லிட்டீங்க... கண்டிப்பா எழுதிடுவோம்...

:)
இதுக்கு பேர்தான் தன்னடக்கமா? நீங்களே சாதான்னா நாங்க எல்லாம் எந்த மூலைக்கு!?!?!?!

பின் தொடர்பவர்கள்