ஔரொபொரொஸ்

பெயர் தெரியாத
மரத்தின் கிளையில்
எதையோ நினைத்துக்
கரைகிறது
ஓர் காக்கை

இரவின் கரியதிரை
கரைதலில்
இரண்டாய் கிழிகிறது

கரைதல்
நிற்கின்ற நொடியில்
அனைத்தையும் விழுங்குகிறது
சலனம் மறைத்த
இன்னொரு இரவு

Comments

நன்றிங்க இராமமூர்த்தி... :)
பத்மா said…
அட்டகாசம் நண்பா .
இரவில் கரையும் காகமே ஒரு மர்மம்

சலனம் மறைத்த இரவு
வார்த்தை பிரயோகம் ஜோர்
நன்றி பத்மா... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.. :)
//////கரைதல்
நிற்கின்ற நொடியில்
அனைத்தையும் விழுங்குகிறது
சலனம் மறைத்த
இன்னொரு இரவு ///////


மிகவும் அழகா சொல்லி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்
நன்றி பனித்துளி சங்கர்... :)

பின் தொடர்பவர்கள்