எனக்கும் அவனுக்குமான பந்தயம்

எனக்கும் இறைவனுக்குமான
பந்தயம்
நிற்காமலே
தொடர்கிறது

ஒவ்வொரு முறையும்
என்னை
வெல்லவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறான் அவன்

வென்றதாய் நினைத்து
எக்காளமிடும்போது
புரட்டிப்போட்டு
சிரிக்கிறான்

மீண்டும் மீண்டும்
எனக்கும் இறைவனுக்குமான
பந்தயம்
நிற்காமலே
தொடர்கிறது.

Comments

பத்மா said…
விடாதீர்கள் .போட்டி போடுபவர்களைதான் அவனுக்கும் ரொம்ப பிடிக்கும்
Aam padma... avanudanaana viLaiyaattu theeramalae thodargirathu!! :)

பின் தொடர்பவர்கள்