சுயமதிப்பீடு

கடல் கொண்ட ஆழத்தில் நான் மீனாய் மிதக்கிறேன்
மணல் கொண்ட கரையினில் நான் நண்டாய் ஊர்கிறேன்.
அவனிருக்கும் அவைதனிலே நான் சிட்டாய்த் திரிகிறேன்
உலகிருக்கும் வெளிதனிலே நான் மீனாய் பறக்கிறேன்..

நானன்றி ஏதுமில்லை என்றே சிரிக்கிறேன்
நானாக நானில்லை என்றும் அறிகிறேன்
வாணாளின் வனப்பில் நான் என்னைத் தொலைக்கிறேன் - இங்கே
வந்துபோகும் வாழ்க்கை அலையின் வேரை தேடினேன்

Comments

பின் தொடர்பவர்கள்