வாழ்வும் வீழ்வும்

கரிய திரையில்
எங்கோ தோன்றி
எங்கோ மறைகிறது
ஒரு மின்மினி
கால் படாத தரையில்
சுவடு பதிய
நடந்து
பாசி மண்டிய குளத்துள்
அது
அமிழ்கிறது
அரை நாழிகையின்
கணத்தில்
முற்றிலுமாய் விளங்கிற்று
என்
வாழ்வும் வீழ்வும்..

Comments

VELU.G said…
நல்ல கவிதை
Paleo God said…
அருமை! :)
பத்மா said…
உண்மைதான் ..எல்லாமே கண நாழிப் பொழுது தான்
நன்றி வேலு
நன்றி ஷங்கர்
நன்றி பத்மா...

:))

பின் தொடர்பவர்கள்